வணக்கம் தோழமைகளே...
முதன்முறையாக நிழற்படக் கவிதைகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....
பனிக்குமிழ் நெஞ்சம்!!
தொட்டுத் தொடர்ந்துவரும்
பட்டுப்போன முகமூடிகள்
சிறுகட்டத்தில் மோதிநிற்கும்
திமில்நிறை எறுதுகளாய்!!
மோதலுக்குப் பின்வரும்
விளைவுகளை நினைத்து
தொண்டைக் குழிக்குள்
உமிழ்நீர் விழுங்கினேன்
தனிச்சிமிழாம் என் நெஞ்சம்
பனிக்குமிழாய் சிதறிடுமோ??!!!
எழில் வண்ண நினைவுகள்!!
விழியலர்ந்த வேளையிலே
குழம்பிய ஓடையில்
தளும்பிய அலைகளினூடே
பளிங்குக் கனவுகளை!!
குலுங்கிய விருட்சத்தினின்று
விழுந்த இலைகொண்டு
நெகிழும் ஒடமாக்கினேன்!
விழிபிரித்துப் பார்க்கையிலே
வழிநெடுக பசுமையாய்
எழில்வண்ண நினைவுகள்!!!
அன்பன்
மகேந்திரன்
முதன்முறையாக நிழற்படக் கவிதைகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....
பனிக்குமிழ் நெஞ்சம்!!
தொட்டுத் தொடர்ந்துவரும்
பட்டுப்போன முகமூடிகள்
சிறுகட்டத்தில் மோதிநிற்கும்
திமில்நிறை எறுதுகளாய்!!
மோதலுக்குப் பின்வரும்
விளைவுகளை நினைத்து
தொண்டைக் குழிக்குள்
உமிழ்நீர் விழுங்கினேன்
தனிச்சிமிழாம் என் நெஞ்சம்
பனிக்குமிழாய் சிதறிடுமோ??!!!
எழில் வண்ண நினைவுகள்!!
விழியலர்ந்த வேளையிலே
குழம்பிய ஓடையில்
தளும்பிய அலைகளினூடே
பளிங்குக் கனவுகளை!!
குலுங்கிய விருட்சத்தினின்று
விழுந்த இலைகொண்டு
நெகிழும் ஒடமாக்கினேன்!
விழிபிரித்துப் பார்க்கையிலே
வழிநெடுக பசுமையாய்
எழில்வண்ண நினைவுகள்!!!
அன்பன்
மகேந்திரன்